கடல் அலையில் சிக்கிய மாணவியைக் காப்பாற்றச் சென்ற மூன்று பெண்கள் உட்பட நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் சம்பவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார்.
கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி என்ற 17 வயது மாணவியுடன் தேவகி செல்வம், பவானி, காயத்திரி என்பவர்களுமாக நால்வரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு கடலில் இறங்கிய பெண்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு கடல் அலையில் சிக்கிய மாணவியைக் காப்பாற்றச் சென்ற மூன்று பெண்கள் உட்பட நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இந்தத் துயரச் சம்பவம் சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் சம்பவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி என்ற 17 வயது மாணவியுடன் தேவகி செல்வம், பவானி, காயத்திரி என்பவர்களுமாக நால்வரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு கடலில் இறங்கிய பெண்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.