• Sep 08 2024

இளம் பெண்! உள்ளாடைக்குள் மறைத்து, ரூ.1 கோடி பெருமதி தங்கம் கடத்தல்!!

crownson / Dec 27th 2022, 10:11 am
image

Advertisement

கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஷகிலா துபாயிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் தனது உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின்  பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.

அதே நேரத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இளம் பெண்ணிற்காக காத்திருந்த காசர்கோடு மாவட்ட போலீசார் ஷகிலாவை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, அவரது உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து காசர்கோடு போலீசார், இளம்பெண்ணையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் இது தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண் உள்ளாடைக்குள் மறைத்து, ரூ.1 கோடி பெருமதி தங்கம் கடத்தல் கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஷகிலா துபாயிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தனது உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின்  பரிசோதனைகளில் சிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அதே நேரத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இளம் பெண்ணிற்காக காத்திருந்த காசர்கோடு மாவட்ட போலீசார் ஷகிலாவை மடக்கி சோதனை செய்தனர்.அப்போது, அவரது உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காசர்கோடு போலீசார், இளம்பெண்ணையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அந்த இளம் பெண்ணிடம் இது தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement