மது விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், எஹட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மது விருந்து நடந்த வீட்டின் உரிமையாளரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.