மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.
குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி samugammedia மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.