முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி யில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி அவரைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 21 வயதான இளைஞர் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ள நிலையில், கர்ப்பவதி கிளினிக்குக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சட்டமருத்துவ அதிகாரிகள் சிறுமியின் வயது 15 என்று அறிந்ததைத் தொடர்ந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
அதற்கு அமைவாக இளைஞன் கைது செய்யப் பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சிறுமியை சட்டத்துக்கு முரணாக குடும்பமாக வாழ வைத்த சிறுமியின் பெற்றோரை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.