வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் தவறி விழுந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அப்பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் எனவும், அவர் தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.