தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள டெக்கூர் கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தேர் உரசி 13 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்தில் 13 குழந்தைகள் படுகாயம். தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள டெக்கூர் கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.அப்போது உயர் மின்னழுத்த மின் கம்பியில் தேர் உரசி 13 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.