• May 19 2024

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா மரணம்!

Tamil nila / Dec 24th 2022, 11:06 pm
image

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது, இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. வசாய் பகுதியில் இன்றைய தினம்  நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். 


பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. 


நடிகை துனிஷா வரும் ஜனவரி  4ஆம் திகதி  தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில்,படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் இரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகின்றார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்றைய தினம்  படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் காணொளியை இணையத்தளத்தில்  பதிவிட்டது தான் அவரது  கடைசி பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா மரணம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது, இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. வசாய் பகுதியில் இன்றைய தினம்  நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. நடிகை துனிஷா வரும் ஜனவரி  4ஆம் திகதி  தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில்,படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் இரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகின்றார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்றைய தினம்  படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் காணொளியை இணையத்தளத்தில்  பதிவிட்டது தான் அவரது  கடைசி பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement