முல்லைத்தீவு
மாவட்ட பொலீஸ் திணைக்களங்களின் ஏற்பாட்டில் குருதிகொடை வழங்கும் நிகழ்வு
ஒன்று 20.06.23 இன்று முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியேர் இதில் குருதி கொடை செய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு,முள்ளியவளை, கருநாட்டுக்கேணி,மாங்குளம்,ஒட்டுசுட்டான், ஐயன்கன்குளம்,நெட்டாங்கண்டல், ஆகிய பொலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய 120 வரையான பொலீஸ் உத்தியோகத்தர்கள் குருதி கொடை வழங்கியுள்ளார்கள்
இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு குருதி கொடை செய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு
மாவட்ட பொலீஸ் உயர் அதிகாரிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின்
வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் குருதி கொடை நிகழ்வில்
கலந்துகொண்டு தொடக்கிவைத்து சிறப்பித்துள்ளார்கள்.