அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(22.01.2023) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க,
"இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள்.
இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்."என கூறியுள்ளார்.
மீண்டும் ஸ்தம்பிக்கப்போகும் கொழும்பு - முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம் SamugamMedia அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(22.01.2023) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, "இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள்.இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்."என கூறியுள்ளார்.