ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில்இ அவரது செயற்பாடுகள் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக கட்சித் தலைமை இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.