இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என தெரிவித்து கிளிநொச்சியில் ஒருசிலரால் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி 55வது படைப்பிரிவின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.