தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷ்யா உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக மொஸ்கோவின் Vnukovo சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை