• Jul 06 2024

மருந்துத் தட்டுப்பாட்டின் எதிரொலி- மருத்துவமனைகளுக்கு நன்கொடையளியுங்கள்- மருத்துவர்கள் கூட்டுக் கோரிக்கை! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 10:07 am
image

Advertisement

மஹரகம புற்றுநோய் மருத்துவமனை உட்பட  நாட்டின் பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனால் நன்கொடையாளர்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன என மருத்துவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் மருத்துவர்கள் மேலும் தெரிவித்ததாவது,


புற்று நோயாளர்களுக்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு எதிர்கொள்கின்றது. மருந்துத் தட்டுப்பாடு சுகாதார சேவைகளை முடக்கியுள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 


தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை பறுவதற்கான நடவடிக்கை கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது. 


ஆபத்தில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்ற சுகாதார அமைச்சு தவறுகின்றது.  நோயாளர்களுக்கான சிகிச்சை தாமதமானால் மருத்துவர்களால் எதனையும் செய்யமுடியாது. எனவே மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளை வழங்க ஆர்வமுடையோர் விரைந்து செயற்பட வேண்டும் என்றார்.

மருந்துத் தட்டுப்பாட்டின் எதிரொலி- மருத்துவமனைகளுக்கு நன்கொடையளியுங்கள்- மருத்துவர்கள் கூட்டுக் கோரிக்கை SamugamMedia மஹரகம புற்றுநோய் மருத்துவமனை உட்பட  நாட்டின் பல மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனால் நன்கொடையாளர்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன என மருத்துவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மருத்துவர்கள் மேலும் தெரிவித்ததாவது,புற்று நோயாளர்களுக்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு எதிர்கொள்கின்றது. மருந்துத் தட்டுப்பாடு சுகாதார சேவைகளை முடக்கியுள்ளது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை பறுவதற்கான நடவடிக்கை கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்ற சுகாதார அமைச்சு தவறுகின்றது.  நோயாளர்களுக்கான சிகிச்சை தாமதமானால் மருத்துவர்களால் எதனையும் செய்யமுடியாது. எனவே மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளை வழங்க ஆர்வமுடையோர் விரைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement