தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்தாயக பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 6ம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர்,ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.