• May 09 2024

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை..! சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி இடம்பெறும் மோசடி..! அதிர்ச்சி சம்பவம்

Chithra / Sep 7th 2023, 12:58 pm
image

Advertisement


யாழில், சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த சந்தேக நபரைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் முதியவர்களிடம் தன்னை சமுர்த்தி உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு உதவி திட்டங்கள் வழங்குவதாக கூறி நகைகள் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்நிலையில் இவ்வாறான நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 பவுன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மக்களுக்கு எச்சரிக்கை. சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி இடம்பெறும் மோசடி. அதிர்ச்சி சம்பவம் யாழில், சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த சந்தேக நபரைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் முதியவர்களிடம் தன்னை சமுர்த்தி உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு உதவி திட்டங்கள் வழங்குவதாக கூறி நகைகள் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .இந்நிலையில் இவ்வாறான நான்கு சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 பவுன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement