வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று (16) காலை வவுனியா நகர் நோக்கி பயணிப்பதற்காக கண்ணாட்டி பகுதியை சேர்ந்த தாயும் மகளும் பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 6வயதுடைய மகள் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்திருந்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு..
இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து
பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது
வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
இதன்போது
வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த ஹெண்டர் ரக
வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.
விபத்தில்
தாயும்மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு சிறுவன்
ஹெண்டர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக
விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த
விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர்
பயணித்திருந்தனர்.விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில்
ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை
விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக
தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர்.
இதனால்
குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார்
வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் கோர விபத்து. தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்று (16) காலை வவுனியா நகர் நோக்கி பயணிப்பதற்காக கண்ணாட்டி பகுதியை சேர்ந்த தாயும் மகளும் பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 6வயதுடைய மகள் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்திருந்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.இரண்டாம் இணைப்பு.இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து
பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது
வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.இதன்போது
வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த ஹெண்டர் ரக
வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.விபத்தில்
தாயும்மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு சிறுவன்
ஹெண்டர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக
விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்துள்ளனர்.குறித்த
விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர்
பயணித்திருந்தனர்.விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில்
ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதேவேளை
விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக
தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர். இதனால்
குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார்
வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.