அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இருவருமே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும், தான் விவசாய அமைச்சை தன்வசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சராகிறார் ஜீவன் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இருவருமே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.எனினும், தான் விவசாய அமைச்சை தன்வசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.