• Aug 07 2025

பாடசாலைக்கு அருகில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு! கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Aug 7th 2025, 1:59 pm
image


கிளிநொச்சி புது முறிப்பு  விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை   கிளிநொச்சி பொலிசாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள்  மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு  அருகாமையில் இன்றைய தினம் காலை அதிகளவான துப்பாக்கி  ரவைகள்  சிதறி காணப்பட்டுள்ளது. 

அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, 

அங்கு சென்றிருந்த பொலிசார், இராணுவம் சிதறி காணப்பட்ட ரவைகளை மீட்டுச்  சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


பாடசாலைக்கு அருகில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி புது முறிப்பு  விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை   கிளிநொச்சி பொலிசாரால் அதிகளவான துப்பாக்கி ரவைகள்  மீட்கப்பட்டுள்ளன.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு  அருகாமையில் இன்றைய தினம் காலை அதிகளவான துப்பாக்கி  ரவைகள்  சிதறி காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, அங்கு சென்றிருந்த பொலிசார், இராணுவம் சிதறி காணப்பட்ட ரவைகளை மீட்டுச்  சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement