நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக யால மற்றும் உடவலவை தேசிய பூங்காக்களை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இடையில் விசேட தீர்மானமொன்று நடைபெறவுள்ளது.
விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை கருத்திற் கொண்டு பூங்காக்களை மூட வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களாக நிலவும் வரட்சியான காலநிலையால் பூங்காக்களுக்குள் உள்ள குளங்கள் மற்றும் நீர்வழிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், அந்த நடவடிக்கையின் நடைமுறைத்தன்மை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் படி, தேசிய பூங்காக்களை மூடுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன் வானிலை ஆய்வுத் துறையையும் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிலுள்ள முக்கிய பூங்காக்களுக்கு பூட்டு முக்கிய தீர்மானம் இன்று.samugammedia நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக யால மற்றும் உடவலவை தேசிய பூங்காக்களை தற்காலிகமாக மூடுவது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இடையில் விசேட தீர்மானமொன்று நடைபெறவுள்ளது.விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை கருத்திற் கொண்டு பூங்காக்களை மூட வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளனர்.சுமார் மூன்று மாதங்களாக நிலவும் வரட்சியான காலநிலையால் பூங்காக்களுக்குள் உள்ள குளங்கள் மற்றும் நீர்வழிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், அந்த நடவடிக்கையின் நடைமுறைத்தன்மை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் படி, தேசிய பூங்காக்களை மூடுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன் வானிலை ஆய்வுத் துறையையும் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.