இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும் வரை குறித்த வீதிகள் மூடப்படவுள்ளன.