• May 08 2024

தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் - கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டிய நபர்..! samugammedia

Chithra / Aug 6th 2023, 6:34 pm
image

Advertisement

 தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை,  அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்​போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார். 

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனினும்,  முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது,  வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் - கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டிய நபர். samugammedia  தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை,  அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்​போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.எனினும்,  முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது,  வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement