யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்க்குள் புகுந்த மருதங்கேணி போலீஸார் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்வை நடாத்துபவர்கள் யார், ஏன் செய்கிறீர்கள், ஏற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை தாருங்கள், குறித்த மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துபவர்கள் அதனை உறுதிப்படுத்தி கடிதங்களை தாருங்கள், என்றும் கோரியதுடன் அச்சுறுத்துயும் சென்றுள்ளதாகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி பொறுப்பாளரும் உடுத்துறை மாவீரர் துயிலில் இல்ல செயற்பாட்டில் ஈடுபடுபவருமான சற்குணதேவியிடம் பல மணிநேரம் விசாரணைகளை நடாத்தியும் சென்றுள்ளனர். என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.