இன்னும் நான்கு மாதங்களில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.