பேருவளை மேற்கு கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து 6 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போதே இவ்வாறு மீட்கப்பட்டிருந்தனர்.
பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில், மோசமான வானிலை காரணமாக படகு மூழ்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த மீட்பு பணி நடைபெற்றது.
பல நாட்களாக மீனவர்கள் தத்தளித்திருந்த நிலையில் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.