யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணி வீதியில் உள்ள நாயன்மார்கட்டு பாரதி மன்றம் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு இன்றையதினம் இடம்பெற்றது.
பாரதி மன்றம் சனசமூக நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாரதி மன்றம் சனசமூக நிலைய தலைவர் தர்மலிங்கம் றூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.