யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை(03) பலாலி அன்ரனிபுரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பாதுகாப்பு தரப்பால் காணிகள் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.