1971 ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியால் இலங்கை அரசிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியின் உயிரிழந்தவர்களுக்கான 52 வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு இன்று(05) யாழ் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தி்ல் காலை 11 மணிக்கு இடம்பெற்றது.
ஆரம்பத்தில் கிளர்ச்சியில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கட்சி அமைப்பாளர்களின் உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கட்சி அமைப்பாளர்கள் , ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.