வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் மாலை மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி அருகில் இருந்த பாலத்தினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.