புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியிடம் செங்கோலை தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட, பிரதமர் மோடி கடந்த 2020ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதற்கமைய தற்போது கட்டுமான பணிகள் முடிந்து இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்..
இதன்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.
இச் செங்கோல் 1947ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கி வைப்பு samugammedia புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பிரதமர் மோடியிடம் செங்கோலை தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட, பிரதமர் மோடி கடந்த 2020ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டியுள்ளார்.இதற்கமைய தற்போது கட்டுமான பணிகள் முடிந்து இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.இதன்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.இச் செங்கோல் 1947ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.