அரசாங்கத்துடன் இணைவதற்கான சுபவேளை எப்போது என்பதை, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டால் தமக்கு வேலைப்பளு கொஞ்சம் குறைவாக இருக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி என்றும் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தயாராகவே இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியான நிலையில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றை பார்த்து படித்து ஒரு விடயம்தெரிந்து கொண்டேன்.
சுபவேளை எப்போது என்பதையும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன தம்பி சொன்னால் எனக்கும் வேலைப்பளு குறையும். அமைச்சர் கஞ்சன விஜயசேகரவின் கருத்தை கேலி செய்யும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூலில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தம்பி கஞ்சன. சுபவேளை பார்த்து தருவீர்களா-மனோவின் பதிவால் மூக்குடைந்த அரசு. samugammedia அரசாங்கத்துடன் இணைவதற்கான சுபவேளை எப்போது என்பதை, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டால் தமக்கு வேலைப்பளு கொஞ்சம் குறைவாக இருக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி என்றும் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தயாராகவே இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியான நிலையில் அவரது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பத்திரிகை ஒன்றை பார்த்து படித்து ஒரு விடயம்தெரிந்து கொண்டேன். சுபவேளை எப்போது என்பதையும் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன தம்பி சொன்னால் எனக்கும் வேலைப்பளு குறையும். அமைச்சர் கஞ்சன விஜயசேகரவின் கருத்தை கேலி செய்யும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூலில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.