நாட்டில் தற்போது சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதியுடன் வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் கூட பிரச்சினைகள் எழலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.