யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை யாழ். மறை மாவட்ட ஆயர்
மற்றும் நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
சந்திப்பு
முடிவுற்றதும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு தொடர்பில் வினவியபோது,
என்னால்
ஊடகங்களுக்கு கருத்து சொல்ல முடியாது விரும்பினால் மாலையில் இடப்பெறும்
தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுவேன் அங்கு வந்து பதிவிடுங்கள் என தெரிவித்து
அவ்விடத்தில் இருந்து நழுவிச் சென்றார்.