பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உண்மையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது புதிராகவே இருந்துவருகிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்துவந்தனர்.
சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
அதற்கேற்ப சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்த வழக்கை CBI விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர்.
பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதே குற்றச்சாட்ட ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது.
5 உடலில் ஒன்று VIP யின் உடல். அந்த உடலை நாங்கள் உடற்கூராய்வு செய்தபோது எங்களுக்கு அந்த உடல் சுஷாந்த்தினுடையது என்று தெரியவந்தது,என்று கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்டோனி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரசித்தம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் மரணித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்மையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது புதிராகவே இருந்துவருகிறது.சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்துவந்தனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.அதற்கேற்ப சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த வழக்கை CBI விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதே குற்றச்சாட்ட ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்.ஆதித்ய உத்தவ் தாக்கரேவிடமிருந்து ரியாவுக்கு 44 முறைகள் போன் சென்றுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளதாக ராகுல் ஷெவாலே குறிப்பிட்டிருக்கிறார்.இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது.5 உடலில் ஒன்று VIP யின் உடல். அந்த உடலை நாங்கள் உடற்கூராய்வு செய்தபோது எங்களுக்கு அந்த உடல் சுஷாந்த்தினுடையது என்று தெரியவந்தது,என்று கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் டோனி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரசித்தம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.