• May 18 2024

மேர்வின் சில்வாவிற்கு மண்டை பழுது...! அவருக்கு மனநல சிகிச்சை தேவை...!சி.வி.கே.சிவஞானம் சீற்றம்..!samugammedia

Sharmi / Aug 15th 2023, 10:36 am
image

Advertisement

எனது பார்வையின் கீழ் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மண்டை பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (14) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர் அரசியலில் இல்லாத கட்சிகள் இல்லை. எல்லா கட்சியிலும் இருந்து, எல்லா கட்சியினரும் அவரை துரத்திய உள்ளார்கள். தான் இருக்கின்றார் என்பதை காண்பிப்பதற்காக இவ்வா மடமைத்தனமான பேச்சுக்களை பேசுகின்றார்.

இவரை கணக்கெடுப்பதே மிகவும் பிழை. அவரை கவனிக்காமல் அவர்பாட்டிலேயே செல்வதற்கு விட்டுவிட வேண்டும்.

உண்மையாகவே இந்த நாட்டில் சட்டம், ஒழுங்குகள் இருக்கின்றது என்றால் பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவர் ஒன்று வன்முறையை தூண்டுகின்றார். இரண்டாவது இனமோதலை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

இவருக்கு இனமோதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு  மனோநிலை பிரச்சினை என்றால் அதற்கான வைத்தியத்தை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.  இல்லையேல் இவரை இந்த இரண்டு குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வன்முறையை தூண்டி தலையை கொய்வது என்று கூறுகின்றார். கொய்வதற்கு இது என்ன தேயிலை கொழுந்தா? இதெல்லாம் பைத்தியகாரத் தனமான பேச்சு. ஆகவே இவரை கணக்கில் எடுப்பது என்பது ஒரு பிழை எனவே நான் நினைக்கிறேன் என்றார்.

மேர்வின் சில்வாவிற்கு மண்டை பழுது. அவருக்கு மனநல சிகிச்சை தேவை.சி.வி.கே.சிவஞானம் சீற்றம்.samugammedia எனது பார்வையின் கீழ் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மண்டை பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் (14) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இவர் அரசியலில் இல்லாத கட்சிகள் இல்லை. எல்லா கட்சியிலும் இருந்து, எல்லா கட்சியினரும் அவரை துரத்திய உள்ளார்கள். தான் இருக்கின்றார் என்பதை காண்பிப்பதற்காக இவ்வா மடமைத்தனமான பேச்சுக்களை பேசுகின்றார்.இவரை கணக்கெடுப்பதே மிகவும் பிழை. அவரை கவனிக்காமல் அவர்பாட்டிலேயே செல்வதற்கு விட்டுவிட வேண்டும்.உண்மையாகவே இந்த நாட்டில் சட்டம், ஒழுங்குகள் இருக்கின்றது என்றால் பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இவர் ஒன்று வன்முறையை தூண்டுகின்றார். இரண்டாவது இனமோதலை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.இவருக்கு இனமோதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு  மனோநிலை பிரச்சினை என்றால் அதற்கான வைத்தியத்தை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.  இல்லையேல் இவரை இந்த இரண்டு குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வன்முறையை தூண்டி தலையை கொய்வது என்று கூறுகின்றார். கொய்வதற்கு இது என்ன தேயிலை கொழுந்தா இதெல்லாம் பைத்தியகாரத் தனமான பேச்சு. ஆகவே இவரை கணக்கில் எடுப்பது என்பது ஒரு பிழை எனவே நான் நினைக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement