இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம். இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும்.
இந்த விடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.
அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல். - அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு samugammedia இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம். இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும்.இந்த விடயங்கள் அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும், அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும், தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும்.அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.