காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை ஆண் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி. லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு
10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த இளைஞர், இன்று
காலை 6 மணியளவில் வீட்டுக்கு 200 மீற்றர் தொலைவில் வெற்றுக்காணியொன்றில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன்
மீட்கப்பட்ட சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.