பிரான்ஸின் காட்டுப்பகுதி ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
மேலும் Quincy-sous-Sénart (Essonne) நகரில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை காலை இச்சடலம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரது சடலம் மரக்குற்றிகளுக்கு அருகே கிடந்ததாகவும், தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.