யாழ். வல்வை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சித்திரை பௌர்ணமி தினமான இன்றைய தினம் காலை நடைபெற்றுள்ளது.
தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக ஊறணி தீர்த்தக்கடற்கரையில் இராட்சத புகைக்குண்டு பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்த புகைக்குண்டு பறக்கவிடுதல் என்பது இலங்கையில் வல்வெட்டித்துறையில் மட்டுமே இடம்பெற்று வருவது தனிச்சிறப்பு வாய்ந்த குறிப்பிடத்தக்கது.