கல்எலிய பிரதேசத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பல பொருட்களுடன் இருவரும் கலெலிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் தயாரிக்கப்பட்ட சில ஆயுதங்கள் 40000 ரூபா தொடக்கம் பல்வேறு விலைகளில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தந்தை மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த தொழிலை சில காலமாக ரகசியமாக நடத்தி வந்துள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பல்வேறு குற்றக் குழுக்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதாள உலக குழுவுக்கு ஆயுதம் தயாரித்த தந்தை மற்றும் மகன் - தொழிற்சாலை சுற்றிவளைப்பு கல்எலிய பிரதேசத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட பல பொருட்களுடன் இருவரும் கலெலிய பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த இடத்தில் தயாரிக்கப்பட்ட சில ஆயுதங்கள் 40000 ரூபா தொடக்கம் பல்வேறு விலைகளில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.தந்தை மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இந்த தொழிலை சில காலமாக ரகசியமாக நடத்தி வந்துள்ளனர்.இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பல்வேறு குற்றக் குழுக்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.