மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படவுள்ள வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு தமது தொழிற்சங்கம் ஆதரவளிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த திரு.பழனி திகம்பரம் தற்போதைய வாழ்க்கைச் செலவின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழக்கூடிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாளொன்றுக்கு 1700 ரூபாவாக இருக்க வேண்டும் என்று கூறியது ஜனாதிபதியும் அரசாங்கமும்தான். ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் தரப்படும் என்றனர். ஆனால் இப்போது இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.
இதன் காரணமாக அரசாங்கத்தின் மீது தோட்ட மக்களுக்கு இருந்த நம்பிக்கை உடைந்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அந்த கலந்துரையாடல்களுக்கு சென்று அவை தோல்வியுற்றபோது, இப்போது தோட்டம் தழுவிய போராட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தோட்டத் தொழிற்சங்கமாக நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் பக்கம் இருக்கிறோம். தோட்டத்தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினைக்காக வேலைநிறுத்தம் செய்தாலும் சரி, ஆர்ப்பாட்டம் செய்தாலும் சரி, நாங்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். ஆனால் சம்பளப் பிரச்சினையின் அடிப்படையில் மக்கள் தோட்டங்களை தவறாகப் பயன்படுத்தினால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள். அப்படி நடந்தால் அவர்களை ஆதரிக்க மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் கூலி 1700 ரூபாவாக இருக்கவேண்டும் என அரசாங்கமே கூறியது ஆனால் அதனை செயல்படுத்தவில்லை - பழனி திகாம்பரம் தெரிவிப்பு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்படவுள்ள வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு தமது தொழிற்சங்கம் ஆதரவளிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த திரு.பழனி திகம்பரம் தற்போதைய வாழ்க்கைச் செலவின்படி தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழக்கூடிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாளொன்றுக்கு 1700 ரூபாவாக இருக்க வேண்டும் என்று கூறியது ஜனாதிபதியும் அரசாங்கமும்தான். ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் தரப்படும் என்றனர். ஆனால் இப்போது இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இதன் காரணமாக அரசாங்கத்தின் மீது தோட்ட மக்களுக்கு இருந்த நம்பிக்கை உடைந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அந்த கலந்துரையாடல்களுக்கு சென்று அவை தோல்வியுற்றபோது, இப்போது தோட்டம் தழுவிய போராட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தோட்டத் தொழிற்சங்கமாக நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் பக்கம் இருக்கிறோம். தோட்டத்தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினைக்காக வேலைநிறுத்தம் செய்தாலும் சரி, ஆர்ப்பாட்டம் செய்தாலும் சரி, நாங்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். ஆனால் சம்பளப் பிரச்சினையின் அடிப்படையில் மக்கள் தோட்டங்களை தவறாகப் பயன்படுத்தினால் நாங்கள் அதற்கு எதிரானவர்கள். அப்படி நடந்தால் அவர்களை ஆதரிக்க மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார்.