திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர்
பகுதியில் வைத்து இன்று காலை மோட்டார் சைக்கிளும் -டிப்பர் வாகனமும் மோதி
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த
நிலையில் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.