• May 18 2024

திருமலையில் சோகம்...! மலர்ச்சாலை வாகனம் மோதி வயோதிபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 3:09 pm
image

Advertisement

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர்மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் இன்று (20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திருமலையில் சோகம். மலர்ச்சாலை வாகனம் மோதி வயோதிபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர்மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இச்சம்பவம் இன்று (20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்துச் சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement