யாழ் போதனா வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் சிவகுமாரன் காலமானார்.
இந்நிலையில் வைத்திய கலாநிதி அமரர் சபாரட்ணம் சிவகுமாரன் (பொதுவைத்திய நிபுணர் )யாழ் போதனா வைத்தியாசலையில் 1981 - 1994 காலப்பகுதியில் ஆற்றிய அளப்பரிய பணியை நினைவுகூறும் முகமாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று(16) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மருத்துவர்கள், மற்றும் சக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.