• Sep 08 2024

LPL தொடருக்கு தெரிவான இரு யாழ்.வீரர்கள்..! samugammedia

Chithra / Jun 18th 2023, 6:51 am
image

Advertisement

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன் ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு கடந்த 3 வருடங்களாக LPL தொடரில் தொடர்ந்து விளையாடுபவர் ஆவார்.

விதுசன் என்பவர் கொழும்பின் பிரபலமான Moors Club அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியது மட்டுமன்றி அவ்வணிக்காக இவ்வருடம் மிகக் கூடுதலான விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இத்திறமையானது தங்களது கல்லூரிக்கு மட்டும் அன்றி எல்லா தமிழ் மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


LPL தொடருக்கு தெரிவான இரு யாழ்.வீரர்கள். samugammedia இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்.மத்திய கல்லூரியை சேர்ந்த 2 வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன் ஆகிய இருவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு கடந்த 3 வருடங்களாக LPL தொடரில் தொடர்ந்து விளையாடுபவர் ஆவார்.விதுசன் என்பவர் கொழும்பின் பிரபலமான Moors Club அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியது மட்டுமன்றி அவ்வணிக்காக இவ்வருடம் மிகக் கூடுதலான விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர்களின் இத்திறமையானது தங்களது கல்லூரிக்கு மட்டும் அன்றி எல்லா தமிழ் மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement