வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ச்சியாக சிதைக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஒருபுறம் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றது.
மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விழிப்போம் அல்லது அழிவோம் என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.