நாளையதினம் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் இணையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உப செயலாளர் ஜெயராஜகுலேந்திரன் வோல்வின் தெரிவித்துள்ளார்.
எனவே வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் அதிபர்களையும் இதில் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், சுமத்தப்பட்டுள்ள வரிச்சலுகையினையும் நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உப செயலாளர் வலியுறுத்தியிருந்தார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது பாடசாலையில் சுகவீன விடுமுறையை அறிவித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அவர் அழைப்பு விடுத்தள்ளார்.
நாளை முடங்குமா வடமாகாணம் சுகவீன விடுமுறையை அறிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் SamugamMedia நாளையதினம் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் இணையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உப செயலாளர் ஜெயராஜகுலேந்திரன் வோல்வின் தெரிவித்துள்ளார்.எனவே வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் அதிபர்களையும் இதில் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தள்ளார்.இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்தவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், சுமத்தப்பட்டுள்ள வரிச்சலுகையினையும் நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உப செயலாளர் வலியுறுத்தியிருந்தார்.அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களது பாடசாலையில் சுகவீன விடுமுறையை அறிவித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அவர் அழைப்பு விடுத்தள்ளார்.