• May 09 2024

அமெரிக்கத் தூதுவருக்காக பொலிஸாரை காட்டிக்கொடுக்க முடியாது..! பதவியிலிருந்து தூக்குங்கள்..! சரத் வீரசேகர

Chithra / Nov 23rd 2023, 1:44 pm
image

Advertisement

 


அமெரிக்க தூதுவர்  ஜூலி சங்கிற்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

குழுவின் அனுமதியுடன் தான மூன்று முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி  தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக  பதவி வகிக்கிறார்.

ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக  செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம்  வலியுறுத்தினேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி,

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஆகவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

அமெரிக்கத் தூதுவருக்காக பொலிஸாரை காட்டிக்கொடுக்க முடியாது. பதவியிலிருந்து தூக்குங்கள். சரத் வீரசேகர  அமெரிக்க தூதுவர்  ஜூலி சங்கிற்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். குழுவின் அனுமதியுடன் தான மூன்று முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி  தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக  பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக  செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம்  வலியுறுத்தினேன்.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி,தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.ஆகவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement