• May 18 2024

யாழில் இரு பெண்கள் செய்த மேசமான செயல்..! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Chithra / Nov 23rd 2023, 1:58 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளைஇ தனது காணியை சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது குறித்த காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காணி உரிமையாளரால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 

காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் இரு பெண்களைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இரு பெண்கள் செய்த மேசமான செயல். வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் வசித்து வரும் நபரொருவர் அண்மையில் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளைஇ தனது காணியை சென்று பார்வையிட்டுள்ளார்.இதன்போது குறித்த காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளரால் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் இரு பெண்களைக் கைது செய்துள்ளனர்.அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement