நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டம் வாழமளை பிரிவில், நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய கோவிந்தசாமி ஜனகன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
அவரது தந்தை வழங்கிய தகவலின் படி, பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அவரது இல்லத்தில் உள்ள தற்காலிக கொட்டிலில் தூக்கில் தொங்கி நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஹட்டன் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்ததை தொடர்ந்து நீதவான் உத்தரவின் படி திடீர் மரண விசாரணை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்ட பின் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறும் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு samugammedia நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டம் வாழமளை பிரிவில், நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.34 வயதுடைய கோவிந்தசாமி ஜனகன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். அவரது தந்தை வழங்கிய தகவலின் படி, பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அவரது இல்லத்தில் உள்ள தற்காலிக கொட்டிலில் தூக்கில் தொங்கி நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, ஹட்டன் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்ததை தொடர்ந்து நீதவான் உத்தரவின் படி திடீர் மரண விசாரணை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்ட பின் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறும் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.